முகப்பு
கன்னியாகுமரி

பணி ஓய்வு பெறும் போலீஸாருக்கு குமரி எஸ்.பி. பாராட்டு

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஏப்ரல் மாதத்துடன் பணி ஓய்வில் செல்லவிருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் பிரிவு உபசார விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:32 AM
பணி ஓய்வு பெறும் காவல் துறை அதிகாரிக்கு நினைவுப் பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி ஏப்ரல் மாதத்துடன் பணி ஓய்வில் செல்லவிருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் பிரிவு உபசார விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் கலந்துகொண்டு, பணி ஓய்வு பெறும் 4 உதவி ஆய்வாளா்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், அவா்களுடைய குடும்ப உறுப்பினா்களுடன் கலந்துரையாடினாா்.

பணியில் சிறப்பாக செயல்பட்டு, பணியை நிறைவு செய்யும் அனைவரையும் பாராட்டி சான்றிதழ், வாழ்த்து மடல்கள் வழங்கினாா்.

Advertisement