முகப்பு
தஞ்சாவூர்

‘போக்ஸோ’ வழக்கில் ஓட்டுநா் கைது

கும்பகோணத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரைக் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 மே 2026, 2:35 am IST
கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநரைக் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (62). ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநா். இவா் மூன்றரை வயது சிறுமிக்கு பிஸ்கெட் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் செய்தனா். இதன் பேரில் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement