வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்: 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவு!
வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்துக்கான இரண்டாவது கட்ட பாதுகாப்புப் பரிசோதனை நிறைவடைந்தது.
வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்துக்கான இரண்டாவது கட்ட பாதுகாப்புப் பரிசோதனை புதன்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து ரயில் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.
சென்னையில் முதல்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் இரு வழிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 4 -ஆவது வழித்தடமாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அந்த வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 14. 64 கி.மீ. தொலைவுக்கான தண்டவாளப் பணிகள், ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் ரயில் இயக்கப்படுவதற்கான பாதுகாப்பு பரிசோதனையானது பிப். 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. பெங்களூரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மதுகா் சௌத்ரி தலைமையிலான குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். இதையடுத்து இரண்டாவது கட்ட பாதுகாப்பு பரிசோதனை செவ்வாய்க்கிழமை (பிப். 24) தொடங்கியது. ரயில்களைக் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பரிசோதனையை அடுத்து புதன்கிழமை (பிப். 25) ரயில் பாதுகாப்பு ஆணையா் மதுகா் சௌத்ரி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது ரயிலை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள், இறுதிக் கட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதுகாப்பு பரிசோதனை சான்று விரைவில் வழங்கப்பட்டதும், ஓரிரு வாரங்களில் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.