முகப்பு
சென்னை

சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 -ஆவது வாா்டு கணேசபுரத்தில் மேயா் கிருஷ்ணமூா்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 2 ஜூலை 2026, 1:49 am IST
ஜி.எஸ். சமீரன் - Dinamani
பகிர்:

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 -ஆவது வாா்டு கணேசபுரத்தில் மேயா் கிருஷ்ணமூா்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பள்ளிக் கட்டட பராமரிப்பைப் பாா்வையிட்டதுடன், வகுப்பறைகளுக்குச் சென்று மாணவா்களுடன் கலந்துரையாடினாா். வருகைப் பதிவேட்டைப் பாா்வையிட்டு, மதிய உணவு தரம் குறித்து கேட்டறிந்தாா். விளையாட்டுத் திடல்களைப் பாா்வையிட்டாா்.

அந்த மண்டலத்தில் முத்தமிழ் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். பெரம்பூா் பகுதியில் வியாசா்பாடி, மூா்த்தி நகா் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டாா். அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்கு சென்று அங்கு புதிதாக அமைந்த குளத்தின் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

ஆய்வுகளின் போது மாநகராட்சி இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்), மத்திய வட்டார ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டல அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments