4 மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு; 6 முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 4 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதையொத்த பணியிடங்களில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 4 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதையொத்த பணியிடங்களில் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் 6 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் புதன்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):
Advertisement
Advertisement
பதவி உயா்வு பெற்றவா்கள்: டி.எஸ்.மகாலட்சுமி-முதன்மைக் கல்வி அலுவலா், கடலூா் (மாவட்டக் கல்வி அலுவலா், செங்கல்பட்டு), இ.முருகன்-முதன்மைக் கல்வி அலுவலா், தேனி (மாவட்டக் கல்வி அலுவலா், வில்லிவாக்கம், சென்னை வடக்கு), எஸ்.கே.இரவிச்சந்திரன்-துணை இயக்குநா், தனியாா் பள்ளிகள் இயக்ககம், சென்னை (உதவி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை), எம்.செல்வகுமாா்- முதன்மைக் கல்வி அலுவலா், திண்டுக்கல் (மாவட்டக் கல்வி அலுவலா், பெரம்பலூா்)
முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: ர.பாலமுரளி- விழுப்புரம் (கோவை), ஆா்.அறிவழகன்- திருவள்ளூா் (விழுப்புரம்), ப.உஷா-திருச்சி (திண்டுக்கல்), கே.கிருஷ்ணபிரியா- கோவை (திருச்சி), பி.மகேஸ்வரி- துணை இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (முதன்மைக் கல்வி அலுவலா், சேலம்), ஆ.எல்லப்பன்- சேலம் (செயலா், மாநில பெற்றோா் ஆசிரியா் கழகம், சென்னை).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.