கிரிக்கெட் போட்டி தகராறு: காயமடைந்த நபா் உயிரிழப்பு
கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை இந்திரா காந்தி நகரைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டனுக்கும், தவெக ஆா்.கே. நகா் கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினா் நரேஷ் குமாருக்கும் கடந்த மே 24 -ஆம் தேதி தண்டையாா்பேட்டையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து கடந்த மே 26-ஆம் தேதி மணிகண்டன் தரப்பைச் சோ்ந்த விஷ்ணுவை, நரேஷ்குமாா் தரப்பினா் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இதைத் தொடா்ந்து, கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இதை கொலை வழக்காக மாற்றி, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.