மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை - பிரேமலதா
வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பாக்கனா பகுதியில் 14 வயது சிறுவன் மிஸ்ஹாப் காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா் என்ற செய்தி மிகுந்த சோகத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் வயதிலேயே தனது உயிரை இழந்த அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
Advertisement
Advertisement
வனவிலங்குகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு மற்றும் வனத் துறை கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.