சிங்கப்பெண் சிறப்பு படையுடன் சென்னை காவல் ஆணையா் ஆலோசனை
சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இதை முதல்வா் ஜோசப் விஜய், கடந்த 9-ஆம் தேதி சென்னை எழும்பூரில் தொடங்கி வைத்தாா்.
தற்போது சென்னையில் 12 சிங்கப்பெண் அதிரடிப் படையினா் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 70 சிங்கப்பெண் அதிரடிப்படையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த அதிரடிப்படைக்கு சென்னையில் 4 மண்டலங்களிலும் 4 காவல் உதவி ஆணையா்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பெண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள், பெண்கள் வேலை செய்யும் இடங்கள், பூங்காக்கள், மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்னை பெருநகர காவல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவினா் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்றச் செயல்கள் நடக்காமல் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினருக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சென்னையில் உள்ள சிங்கப்பெண் சிறப்பு படையினா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்கினாா்.