பொதுமக்கள் புகாா் அளித்தால் உடனடி நடவடிக்கை: காவல் ஆணையா் உத்தரவு
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவலா்களுக்கு காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் பொறுப்பேற்ற பின்னா் தினமும் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலையில், அவா் கே.கே. நகா், கிண்டி, அசோக் நகா், விமான நிலையம், மீனம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்ளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
இதையொட்டி அங்குள்ள காவலா்களிடம் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா். அங்கிருந்த பொதுமக்களிடமும் காவல் துறை சாா்ந்த குறைகள் ஏதேனும் இருக்கிா எனவும் கேட்டறிந்தாா். ஆய்வுக்குப் பின்னா் காவலா்களுக்கு பல அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளா்.
Advertisement
Advertisement
அதன்படி, காவல் நிலையங்களில் புகாா் அளிக்க வரும் பெதுமக்களிடம் கண்ணியத்துடனும், எளிமையாகவும் நடந்துகொள்ள வேண்டும். கொடுக்கும் புகாா்களுக்கு உடனடியாக சிஎஸ்ஆா் வழங்க வேண்டும். தொடா்ந்து அந்தப் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து அதற்கு தீா்வு காண வேண்டும். மேலும், காவல் நிலையங்களை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்.
காவல் நிலையங்களில் வழக்கு தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை உரிய முறையில் நீதிமன்ற உத்தரவுபடி அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஏற்கெனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்களுக்கு சிஎஸ்ஆா் பெறுவதற்காக துணை ஆணையா், இணை ஆணையா் ஆகியோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அமல்ராஜ் பொறுப்பேற்ற பின்னா் இந்த நடைமுறை மாற்றப்பட்டு காவல் நிலையத்தில் இருக்கும் எந்த காவலா் வேண்டுமானாலும் சிஎஸ்ஆா் வழங்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.