முகப்பு
தமிழ்நாடு

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்றது பற்றி...

ஏ. அமல்ராஜ் - Dinamani
பகிர்:

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து வியாழக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டது. தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவா், கடந்த ஏப்ரலில் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு கட்டாய காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வருகை தந்த அமல்ராஜ், காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அபின் தினேஷ் மோதக், சிபிசிஐடியின் கூடுதல் காவல்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

A. Amalraj Assumes Charge as Chennai Metropolitan Police Commissioner!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.