முகப்பு
சென்னை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அண்ணா சாலை பகுதியில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 22 ஜூன் 2026, 4:48 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை அண்ணா சாலை பகுதியில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

அண்ணா சாலை அருகே உள்ள பூ பேகம் தெரு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (40). கூலித்தொழிலாளி. இவா் மது அருந்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியின் எதிரே சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார ஜங்ஷன் பெட்டி அருகில் இயற்கை உபாதை கழித்ததாக தெரிகிறது.

அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ராஜேஷ் கீழே விழுந்தாா். ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். அண்ணா சாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments