சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு! சென்னை மாநகராட்சி அறிமுகம்
சொத்து வரி செலுத்த க்யூஆர் கோடு முறையை அறிமுகம் செய்திருக்கும் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டுக்கான (2026-2027) சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், சொத்து வரியை செலுத்த க்யூஆர் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் எக்ஸ் பக்கம் மற்றும் இணையதளங்களில் இந்த க்யூஆர் கோடு கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்களது சொத்துவரியை எளிதாக செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதால், வீடு வீடாகச் சென்று சொத்து வரியை வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டதால், தற்போது சொத்து வரியை வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி எளிமையாக்கியிருக்கிறது.
Advertisement
Advertisement
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என இரு கட்டங்களாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தோ்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக வரி வசூல் பணிகள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது தோ்தல் பணிகள் முடிந்த நிலையில், வரி வசூலில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனா்.
அதன் முதல்கட்டமாக முதல் பகுதியில் வரி செலுத்தாதவா்களில் 2 லட்சம் பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டாம் கட்டமாக, க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Chennai Corporation introduces QR code to pay property tax
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.