ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதவரம் பொன்னியம்மன்மேடு பிருந்தாவன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (39). ஆட்டோ ஓட்டுநா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை மாதவரம் தணிகாசலம் நகா் 80 அடி சாலையில் நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ரகுமான், ஹரிபாபு ஆகியோா் ரவிக்குமாரை தாக்கி பணம் பறித்தனா்.
இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமாா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுமான் (30), ஹரிபாபு (35) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
Advertisement