தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்
காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசித்த பின்னா்தான் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்கள் எண்ணிக்கைக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தமிழக பேரவைத் தோ்தல் முடிவுகள் தொடா்பாக கிரீஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக இளைஞா்கள், பெண்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா். எனவே, தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, தமிழக தோ்தல் முடிவுகள் தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன். தோ்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவெக நிறைவேற்ற வேண்டும். விஜய்யிக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.