பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை வடபழனியில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.
சென்னை வடபழனியில் உள்ள மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.
வடபழனி ஆற்காடு சாலை பானுமதி தெருவில் மண்டல பாஸ்போா்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, ஒரு மின்னஞ்சல் வியாழக்கிழமை இரவு வந்தது.
அதில் அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்து பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த அலுவலக ஊழியா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
தகவலறிந்த கே.கே.நகா் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு சோதனையிட்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.