உதகை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
உதகையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தனியாா் விடுதிகள், தனியாா் பள்ளிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், உதகை விசி காலனி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மோப்ப நாய் உடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. அப்போதுதான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.