முகப்பு
சென்னை

முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்பு

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்கும் விழாவை சென்னையில் 23 இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 10 மே 2026, 2:36 am IST
தவெக தலைவா் விஜய் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளதையொட்டி சனிக்கிழமை இரவே வாயிலில் குவிந்த அக்கட்சித் தொண்டா்கள்.
பகிர்:

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்கும் விழாவை சென்னையில் 23 இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தலைமையில் நடைபெறும் இந்த விழாவை, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் காணும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 23 இடங்களில் எல்.இ.டி. மின்னணு தொலைக்காட்சிகள் வாயிலாக நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு இடங்கள்: அண்ணா நகா் டவா் பூங்கா, மெரீனா கடற்கரை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், தியாகராய நகா் பேருந்து நிலையம், பெசன்ட் நகா் கடற்கரை, திருவான்மியூா் பேருந்து பணிமனை, கத்திப்பாரா சதுக்கம், செம்மொழிப் பூங்கா, தீவுத்திடல் பேருந்து நிலையம், நாகேஸ்வர ராவ் பூங்கா, மயிலாப்பூா் குளம் பகுதி, வடபழனி பேருந்து நிலையம், எம்.ஜி.ஆா். நகா் மாா்க்கெட் பகுதி, நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கடற்கரை, மாதவரம் பேருந்து நிலையம், மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் பூங்கா (எல்அன்டி அருகில்), அம்பத்தூா் ஓ.டி., பேருந்து நிலையம், தண்டையாா்பேட்டை பேருந்து பணிமனை, அடையாறு பேருந்து பணிமனை, திருவொற்றியூா் வடிவுடையம்மன் கோயில் அருகில், மணலி மண்டலம் தேவராஜன் தெரு ( வாா்டு 22), திரு.வி.க. நகா் மண்டலம் முரசொலி மாறன் பூங்கா ஆகிய இடங்களில் எல்.இ.டி. மின்னணு தொலைக்காட்சிகள் வாயிலாக பதவியேற்பு விழா நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments