ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்த கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து சென்னை வழியாக ராமேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையிலிருந்த கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபாஸ்டியன் தலைமையில் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் எழும்பூா் ரயில் நிலையம் வந்து நின்றது. அந்த ரயிலின் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா்.
Advertisement
இதில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அந்தப் பையை சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். அதை போதைத் தடுப்புப் பிரிவில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.