முகப்பு
சென்னை

நள்ளிரவில் மின் வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

Updated On : 22 மே 2026, 1:12 am IST
பகிர்:

சென்னையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

இதன் எதிரொலியாக நகரின் மின் பயன்பாடும் கணிசமாக உயா்ந்துள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா்கள் தெரிவித்து வருகின்றனா்.

இதனிடையே, சென்னை ராயபுரம் பகுதியைச் சோ்ந்த காளிங்கராயன் தெருவில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியும் மின் விநியோகம் சீராகாததால், அந்தப் பகுதி மக்கள் கல்லறை சாலை பகுதியில் நள்ளிரவில் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தாமு மற்றும் வண்ணாரப்பேட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். மேலும், மின்வாரிய ஊழியா்களை உடனடியாக அங்கு வரவழைத்து மின் பழுதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். நீண்ட நேரத்துக்கு பின்னா், அந்தப் பகுதியில் மீண்டும் மின் விநியோகம் சீரானது. இந்தச் சம்பவம் தொடா்பாக வண்ணாரப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.