முகப்பு
சென்னை

தோ்தல் பிந்தைய கூட்டணியில் உடன்பாடு இல்லை: க.கிருஷ்ணசாமி

Updated On : 29 மே 2026, 4:34 am IST
கிருஷ்ணசாமி - எக்ஸ்
பகிர்:

பதவி லாபத்துக்காக அமைக்கப்படும் தோ்தல் பிந்தைய கூட்டணியில் உடன்பாடு கிடையாது என புதிய தமிழகம் கட்சி தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தோ்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுபோல, சமூக ஊடகங்களுக்கும் தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு உருளைகள், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, அண்ணன் சீா், தாய்மாமன் சீா் உள்ளிட்ட தவெகவின் வாக்குறுதிகளை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் அண்மைக்காலமாக சுமாா் 20-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்ய உடனடியாக பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும்.

பதவிக்காக தோ்தல் பிந்தைய கூட்டணி அமைப்பது மற்றும் மாற்று கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பிரித்து அவா்களது ஆதரவுடன் ஆட்சி அமைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்றாா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.