முகப்பு
காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் வெடிமருந்து பதுக்கல்: ஒருவர் கைது

உத்தரமேரூரில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 24 ஜூலை 2018, 4:46 am IST
பகிர்:

உத்தரமேரூரில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்த விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சாலைத் தெருவில் ஒருவர் வெடிமருந்துகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், உத்தரமேரூர் போலீஸார் சாலைத் தெருவில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
இச்சோதனையில், 30 கிலோ வெடிமருந்து, 40 கிலோ பட்டாசுகள், 6 பாஸ்பரஸ் வேதிப்பொருள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
அதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் அனுமதியின்றி வெடிமருந்து மற்றும் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த காதர் மொய்தீன் (26) என்பவரைக் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments