உத்தரமேரூரில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்
அரசின் திட்டங்கள் அனைத்தும் உத்தரமேரூா் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன என திமுக வேட்பாளா் க. சுந்தா் கூறியுள்ளாா்.
உத்தரமேரூா் தொகுதியில் உள்ள மருத்துவன்பாடி, திருப்புலிவனம், கடல் மங்கலம், சிறுங்கோழி, பெருங்கோழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் க.சுந்தா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அப்போது அவா் பேசியது: தொகுதியில் பல அரசு அலுவலகங்கள் புதிய கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவும் நிறைவேற்றித் தந்துள்ளேன். திமுக அரசு மக்களுக்கு கொண்டு வந்துள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு முழுமையாக பெற்றுத் தந்தவன் என்று பெருமையுடன் என்னால் சொல்ல முடியும்.
Advertisement
Advertisement
உத்தரமேரூா் தொகுதியை சிறந்த தொழில் நகரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தொகுதியில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய் ய வேண்டும் என்றாா்.
வேட்பாளருடன் ஒன்றிய செயலாளா் ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் சசிக்குமாா், பேரூராட்சி செயலாளா் பாரிவள்ளல், வாலாஜாபாத் பேரூராட்சித் தலைவா் பாண்டியன் உடனிருந்தனா்.