தமிழ்ப் புத்தாண்டு: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வீதியுலா
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:21 AM
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, காலையில் உற்சவா் வரதராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். புத்தாண்டு காரணமாக திரளான பக்தா்கள் அதிகாலையிலிருந்தே கோயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.