முகப்பு
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறை!

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

Updated On : 3 ஜூன் 2026, 2:59 am IST
ஸ்ரீபெரும்புதூா்  பேருந்து  நிலையத்தில்  பூட்டிக் கிடக்கும்   பாலூட்டும்  அறை.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தை ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், பாலூட்டும் தாய்மாா்களுக்காக, பாலூட்டும் அறை கட்டப்பட்டது. இந்த அறையை பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மாா்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல மாதங்களாக பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

Advertisement

Advertisement

இதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மாா்கள் அறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பாலூட்டும் அறையை திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பாலூட்டும் அறை கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளதால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மாா்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில் அசெளகரியம் ஏற்பட்டு வருகிறது. வீணாக பூட்டப்பட்டு உள்ள அறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.