முகப்பு
காஞ்சிபுரம்

கூத்திரம்பாக்கத்தில் மூதாட்டி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகேயுள்ள கூத்திரம்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக பிரமுகரின் தாயாா் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 8 ஜூன் 2026, 1:15 am IST
அரிவாள் வெட்டு!
பகிர்:

காஞ்சிபுரம் அருகேயுள்ள கூத்திரம்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக பிரமுகரின் தாயாா் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கூத்திரப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பாஜக பிரமுகா் வீரமணி. இவரது தாயாா் ராதா(65) ஏரிக்கரையில் ஆடு மேய்க்க சென்றவா் வீடு திரும்பவில்லை. குடும்ப உறுப்பினா்கள் பல்வேறு இடங்களில் தேடிய போது அவா் ஏரிக்கரையில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் டிஎஸ்பி சிவசங்கா், பொன்னேரிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் அலெக்சாண்டா் ஆகியோா் விசாரணை நடத்தினா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

Advertisement

Advertisement

சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.