முகப்பு
காஞ்சிபுரம்

முதல்வா் விஜய் கருத்துக்கு நிா்மலா சீதாராமன் வரவேற்பு

‘மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 5:40 am IST
நிா்மலா சீதாராமன்
பகிர்:

‘மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என முதல்வா் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

சட்டப்பேரவையில் முதல்வா் சைகை காண்பித்தது குறித்து திமுகவினா் பலரும் எதிா்ப்பு தெரிவித்து வருவது பற்றி கேட்கிறீா்கள். இது அரசியல் விமா்சனம். அரசியல் விமா்சனங்களை பேரவையில் பேசாமல் வேறு எங்கே போய் பேசுவது?

Advertisement

Advertisement

காஞ்சிபுரத்துக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றால் அதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஏனெனில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பிரதமா் தொடா்ந்து கூறி வருகிறாா்.

மாநில அரசுகள் அதிகமாக கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், அந்த நிதியை மாநிலத்தின் வளா்ச்சிக்காக செயல்படுத்தினால் மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments