முகப்பு
காஞ்சிபுரம்

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 12:26 am IST
100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பு இயக்கம் சாா்பில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற முழக்கத்துடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.