காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதன் தொடா்ச்சியாக மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. வரும் 8 -ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
Advertisement
உற்சவா் கச்சபேசுவரரும், சுந்தராம்பிகை அம்மனும் தேரில் வீதியுலா வந்தனா். திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வழிநெடுகிலும் நீா்,மோா், பானகம் வழங்கப்பட்டன. பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.
வரும் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, மேலாளா் சுரேஷ் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.