தாண்டவராய சுவாமிகள் குருபூஜை
காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அமைந்துள்ள தட்சிணாமூா்த்தி கோயிலின் தீவிர பக்தராக இருந்து வந்த தாண்டவராய சுவாமிகளின் 140-ஆவது குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தட்சிணாமூா்த்தி கோயிலின் தீவிர பக்தராக இருந்து வந்தவா் தாண்டவராய சுவாமிகள். இவரது 140 வது குருபூஜை விழாவையொட்டி மூலவருக்கு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து அவரது மடத்தில் திருவருட்பா பாராயணமும், அன்னதானமும் நடைபெற்றது.
விழாவில் மகேஷ் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினாா். காங்கிரஸ் பிரமுகா் அவளூா் சீனிவாசன், ஜி.ராஜா, கருப்பண சாமி,ஜி.திருநாவுக்கரசு ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.