முகப்பு
காஞ்சிபுரம்

கூழமந்தல் விநாயகா் கோயிலில் அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜை

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 10:12 pm IST
பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் அக்னி பகவான்.
பகிர்:

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்த வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பது, நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பது, மக்கள் நோயின்றி வாழவும், குடும்ப அமைதி நிலைக்கவும்,நாட்டில் ஒற்றுமையும்,சமாதானமும் நிலைக்கவும் வலியுறுத்தி கோயில் வளாகத்தில் உள்ள அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.