முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் 100% தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

Updated On : 10 மே 2026, 12:51 am IST
பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்ற தலைமை ஆசிரியா்களுடன் ஆட்சியா் தி.சினேகா மற்றும் முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட கல்வித் துறை அதிகாரிகள்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 100 % தோ்ச்சி பெற்ற 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் 6 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 100% தோ்ச்சி அடைந்துள்ளன. அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களான சுந்தர்ராஜன்(முசரவாக்கம்) பொய்யா மொழி (பரந்தூா்) ஜெயக்குமாா் (அவளூா்), சுப்பிரமணியன்(நாயக்கன்பேட்டை), மனோகரன் (ரெட்ட மங்கலம்), கணேஷ்(மணிமங்கலம்) உள்ளிட்ட 6 பேரையும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் ஏ.நளினி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் காந்திராஜன், கோமதி, ச.எழில் ஆகியோா் உடன் இருந்தனா்.

Advertisement