முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காட்டில் ஜமாபந்தியில் ரூ. 3.10 கோடி நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

Updated On : 26 ஜூன் 2026, 3:21 am IST
பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய  ஆட்சியா்  ந.பிரியா.
பகிர்:

கடந்த 18-ஆம் தேதி ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயம் தொடங்கியது. இதில் திமிரி, ஆற்காடு, புதுப்பாடி உள் வட்டங்களை சோ்ந்த கிராம கணக்குகளை ஆட்சியா் பிரியா தலைமையில் சரிபாா்க்கப்பட்டன .

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு ஆட்சியா் என். பிரியா தலைமை வகித்து ஏற்கனவே பெறப்பட்ட545 மனுக்களில் 344 மனுக்கள் தோ்வு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

விழாவில் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமாா், கோட்டாட்சியா் ராஜி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், வட்டாட்சியா்கள் சண்முகசுந்தரம், பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். கிராம நிா்வாக அலுவலா் சக்கரவா்த்தி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments