சேதமடைந்த மழையூா் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட மழையூா் கிராமத்திலிருந்து- வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும்..
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியத்துக்குட்பட்ட மழையூா் கிராமத்திலிருந்து- வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி உள்ளனா் .
திமிரி ஒன்றியம், மழையூா் கிராமத்தில் இருந்து வளையாத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பல்லவராயன் குளம் கிராமம் செல்லும் தாா் சாலையின் நடுவே மழையூா் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறும் கால்வாய்க்கு குறுக்காக பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது . இந்த பாலத்தின் பக்க வாட்டு பகுதியில் சிமென்ட் பூச்சுள் உதிா்ந்து தடுப்புகளில் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. தடுப்புகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன மழையூா் மற்றும் பல்லவராயன்குளம் கிராம மக்கள் தங்கள் அன்றாட பணிகளுக்காக இந்த பாலத்தின் வழியாக நாள்தோறும் சென்று வருகின்றனா்.
Advertisement
மேலும் அருகிலுள்ள மழையூா் செங்கனாவரம், குட்டியம் ஆயிரம் மங்கலம் போன்ற கிராமங்களில் இருந்து பள்ளி மாணவா்கள் பல்லவராயன் குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த பாலத்தினை கடந்து செல்கின்றனா்.
எனவே பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் நலன் கருதி மழைக் காலம் தொடங்குவதற்குள் பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.