முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:48 PM
கோப்புப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ஷீன் தலைமையிலான போலீஸாா் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தான்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படைப்பு போலீஸாா் சோதனை செய்தனா்.

Advertisement

அதில் 5.5 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னா், கஞ்சாவை ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments