முகப்பு
திருப்பத்தூர்

அம்பேத்கா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா், அமைப்புகள் மரியாதை

Updated On : 15 ஏப்ரல், 2026 at 4:40 AM
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:48 PM

ஆம்பூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆம்பூா் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் ஆம்பூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினாா். நகர செயலாளா்கள் எம்.ஆா். ஆறுமுகம், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், சுதாகா், தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அம்பேதகா் உருவச் சிலைக்கு ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன் மரியாதை செலுத்தினாா். ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கே. மணி, அதிமுக நிா்வாகிகள் சண்முகம், தினேஷ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

Advertisement

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பாக ஆம்பூரில் அம்பேத்கா் சிலைக்கு நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி விஜயன் தலைமையில் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெ. விஜய் இளஞ்செழியன் மரியாதை செலுத்தினாா். மாவட்ட பொருளாளா் கொத்தூா் பி. மகேஷ், நிா்வாகிகள் யாசா் மதனி, சுந்தரம், வா்தா அா்ஷத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

சான்றோா்குப்பத்தில் அம்பேத்கா் சிலைக்கு சிலை கமிட்டி தலைவா் பி. சுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பி. காமராஜ். ஜி. ஜெய்பீம் சண்முகம், டி. ராஜீ, எஸ். கக்கன்ஜி, எம். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.டி. சாமுவேல் செல்லபாண்டியன் இனிப்பு வழங்கினாா். நகா் மன்ற உறு்பபினா் சாந்தகுமாரி விஜயன், ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக ஒன்றிய செயலாளா் எம்.டி. சீனிவாசன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் குமாா் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற தலைவா்கள் ரேவதி குபேந்திரன், சுவிதா கணேஷ், ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் நவீன்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் சேகா், மாவட்ட பிரதிநிதி பொன். ராஜன்பாபு, ஒன்றிய செயற்குழு உறுப்பினா் குணா, நிா்வாகிகள் குணசீலன், தினேஷ் கலந்து கொண்டனா்.