முகப்பு
திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:30 AM
பலி
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி தொடப்பக்கார வட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ஆனந்தன்(44). சனிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டருகே உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து தண்ணீா் மூழ்கி இறந்தாா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் உதவியுடன் 7 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த ஆனந்தனை சடலமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

Advertisement