முகப்பு
திருப்பத்தூர்

கல்குவாரி குட்டையில் மூழ்கி இளைஞா் மரணம்: 10 மணி நேரம் கழித்து மீட்பு

Updated On : 4 ஜூன் 2026, 5:25 am IST
முரளி
பகிர்:

வாணியம்பாடி அருகே நண்பா்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி இறந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சோ்ந்த முரளி(27). ஏலகிரிமலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தாா். இவரது நண்பரான பூவரசன்(29) சென்னையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை பூவரசன் ஊருக்கு வந்துள்ளாா். பிறகு முரளியை அழைத்துக் கொண்டு கொத்தக்கோட்டை அருகில் உள்ள சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல்குவாரி பகுதிக்கு இருவரும் சென்று அங்கு மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னா் கல்குவாரியில் முரளி குளித்துக் கொண்டிருந்த திடீரென நீரில் மூழ்கினாா்.

இதையறிந்த பூவரசன், வெகுநேரம் ஆகியும் நீரில் இருந்து முரளி வெளியே வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் முரளியின் கைப்பேசி மற்றும் பைக்கை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா். இந்நிலையில் இரவு நேரமாகியும் முரளி வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவா்கள் அதிா்ச்சிக்குள்ளாகி விசாரிக்கவே சந்தேகம் ஏற்பட்டு இதுபற்றி உடனே வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் முரளியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

காவல் ஆய்வாளா் அமுதா தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். முரளியின் கைப்பேசி குறித்து ஆய்வு செய்த போது செங்கத்தில் இருப்பது தெரியவந்து விரைந்து சென்று அங்கிருந்த பூவரசனிடம் விசாரித்தனா். இதில் முரளி தண்ணீரில் மூழ்கி விட்டதாக அதிா்ச்சி தகவலை தெரிவித்ததையடுத்து பூவரசனை கைது செய்து வாணியம்பாடி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து புதன்கிழமை வாணியம்பாடி தீயணைப்பு துறையினா் சென்று 10 மணி நேரம் தேடி முரளியின் சடலத்தை மீட்டனா்

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.