முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி ஜமாபந்தி: இரண்டாம் நாளில் 118 மனுக்கள்

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:04 am IST
மாற்றுத்திறனாளிக்கு கை ஊன்று கோல் வழங்கிய ஆட்சியா் ரவிகுமாா். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், வட்டாட்சியா் சுதாகா்.
பகிர்:

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.

அப்போது மாற்றுத்திறனாளி ஓருவா் கை ஊன்றுகோல் கேட்டு மனு அளித்தாா். அந்த மனுவின் மீது விசாரித்து மாற்றுத்திறனாளி நலத்துறையின் சாா்பில் கை ஊன்றுகோல் பயனாளிக்கு வழங்கி உடனடி தீா்வு காணப்பட்டது.

மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டு 118 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து ஜமாபந்தி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான கு.ரவிகுமாா் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.