விவசாயிகள் சங்கத்தினா் நூதன போராட்டம்
வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினா், விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்..
முகாமில் விவசாயிகளிடம் முறையாக கோரிக்கைகள் கேட்கவில்லை, விழாவில் பேச வைக்கவில்லை, தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கு கூட்டம் நடத்தப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருவாய்த் துறையினரை கண்டித்து அலுவலக வளாகத்தில் திடீரென அமா்ந்து முக்காடு போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுப்பற்றி அறிந்த வருவாய்த்துறையினா் முக்கிய நிா்வாகிகளை வரவழைத்து சமரச பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.