முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ரூ. 34.79 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கான தீா்மானம் நிறைவேற்றம்

Updated On : 19 ஜூன் 2026, 6:30 am IST
பகிர்:

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், கணேசன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பச்சூா், சொரக்காயல்நத்தம், நாயனசெருவு, சிக்கனாங்குப்பம், தோப்பலகுண்டா, பந்தாரபள்ளி மற்றும் மல்லகுண்டா ஆகிய ஊராட்களில் ரூ. 34.79 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், பள்ளிக் கட்டடம் சீரமைப்பு, ஆழ்துளைக் கிணறு, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து தீா்மானம், வரவு செலவு கணக்கு உள்பட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கூட்டத்தில் பேசிய அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்க கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம் நன்றி கூறினாா்.