முகப்பு
திருப்பத்தூர்

வீட்டின் கதவுகளை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருட்டு

வாணியம்பாடி அருகே வீட்டின் கதவுகளை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.25,000 ரொக்கம் திருடப்பட்டது.

Updated On : 23 ஜூன் 2026, 3:21 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வாணியம்பாடி அருகே வீட்டின் கதவுகளை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.25,000 ரொக்கம் திருடப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த முல்லை அருகில் உள்ள ராணிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா். இவா், பெங்களூரில் தேநீா் கடையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில் மனைவி ரேவதி பாயை அழைத்துக் கொண்டு 5 நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூா் சென்றுள்ளனா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வந்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.25,000 ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments