முகப்பு
திருப்பத்தூர்

வட்டார போக்குவரத்து அலுவலா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு

Updated On : 26 ஜூன் 2026, 5:09 am IST
பகிர்:

திருப்பத்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 3 போ் மீது ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள எலவம்பட்டி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் கடந்த 18-ஆம் தேதி சோதனை நடத்தினா். சோதனையில் எந்தவித பணமும் கைப்பற்றப்படவில்லை.

இருப்பினும் அங்கு இருந்த அலுவலா்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஜி-பே, போன்-பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் சுமாா் ரூ.1 லட்சம் வரை பணப்பரிவா்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், மோட்டாா் வாகன ஆய்வாளா் (நிலை-1) முரளி, இடைதரகா் ஆனந்த் ஆகியோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments