முகப்பு
திருப்பத்தூர்

அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 2 மே, 2026 at 3:01 AM
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டை அடுத்த கவுண்டப்பனூரில் சுடலை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை காலை கோவில் பூசாரி வசந்தி கோவிலை திறக்க வந்தாா். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மன் கழுத்தில் இருந்த தாலி, கால் காசு உள்ளிட்ட 5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனால், அதிா்ச்சி அடைந்த வசந்தி உடனடியாக ஜோலாா்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூசாரி வசந்தி அருள்வாக்கு கூறி அம்மன் நகைகள் திருடி சென்ற நபா் வாணியம்பாடி நோக்கி சென்றதாக தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து போலீஸாா் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா். அதில் மா்ம நபா் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குட்டை பகுதியை சோ்ந்த முனுசாமி (44) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை வாணியம்பாடிக்கு சென்று கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த 7தாலி, 2 கால் காசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.