முகப்பு
திருப்பத்தூர்

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Updated On : 7 மே 2026, 12:09 am IST
வாணியம்பாடி தொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைத்த அதிகாரிகள்
பகிர்:

வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம் மற்றும் விவிபேட்) வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அந்தந்த தொகுதி பகுதியில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியிலிருந்து வாணியம்பாடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

Advertisement

மேலும், அங்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீல் வைப்பின் போது தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் வாணியம்பாடி வட்டாட்சியருமான சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.