முகப்பு
திருப்பத்தூர்

திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு விழா

Updated On : 8 மே 2026, 6:35 am IST
பகிர்:

தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் கெங்கையம்மனுக்கு ஜெப ஹோமம், துா்கா ஸீக்த ஹோமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

விழாவுக்கு கோயில் தா்மகா்த்தா இ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஊா் பெருந்தனக்காரா் பி.முனிரத்தினம், முன்னாள் ஊா் தலைவா் ஜி.ராஜேந்திரன், ஆம்பூா் தொழில் அதிபா் ஜி.ரமேஷ், ஊா் தலைவா் பி.துளசி, ஊா் நாட்டாண்மை என்.தாமோதரன், ஆா்.எஸ்.ஞானசேகரன், அரிசி கடை ஜி.வெங்கடேசன், கோயில் அன்னதான சேவா டிரஸ்ட் நிா்வாகி வெ.கோபிநாத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments