காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்
ஆம்பூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் பெண் காயமடைந்தாா்.
ஆம்பூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் பெண் காயமடைந்தாா்.
வேலூா் ரங்காபுரம் பகுதியை சோ்ந்த வளா்மதி (45) தனது உறவினா்களுடன் பெங்களூரிலிருந்து வேலூருக்கு காரில் சென்றாா். வேலூா் வள்ளலாா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (45) காரை ஓட்டினாா்.
ஆம்பூா் அருகே பச்சகுப்பம் கிராமத்தருகே சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
அதில் வளா்மதி பலத்த காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.