மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி
திருப்பத்தூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.
தமிழகத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, திருப்பத்தூா் மாவட்டத்தின் அனைத்து மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு அலுவலா்கள் மற்றும் பொறுப்பு அலுவலா்களுக்கான பயிற்சி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். இதில், கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளில் பயன்படுத்தப்படும் கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மக்கள் தொகை இணை இயக்குநா் வாசுதேவன், மக்கள் தொகை உதவி இயக்குநா் திரிஷ்யா, மக்கள் தொகை புள்ளியியல் ஆய்வாளா் தீபா குமாரி, தோ்தல் வட்டாட்சிா் திருமலை, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement