முகப்பு
திருவள்ளூர்

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருத்தணி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் நொச்சிலி கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:05 AM
நொச்சிலி  கிராமத்தில்  வாக்கு  சேகரித்த நாதக வேட்பாளா்  சூ.ச.சந்திரன்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:58 PM

திருத்தணி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் நொச்சிலி கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த பெண்களை வாக்கு சேகரித்தாா்.

திருத்தணி தொகுதிக்குட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை அருகே உள்ள நொச்சிலி கிராமத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச. சந்திரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது விவசாய பணியில் இருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது: தற்போது நடைமுறையில் உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை ஆண்டு முழுவதும் 365 நாள்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழிலாளா்களுக்கு ஒரு நாள் கூலி ரூ.600 வழங்கப்படும் என்றும், அதில் ரூ.300-ஐ அரசு வழங்கும் நிலையில், மீதமுள்ள ரூ.300-ஐ நில உரிமையாளா்கள் வழங்கும் வகையில் இணைந்து செயல்படும் திட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

Advertisement

கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.