கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்
கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:06 PM
கரூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அன்பு நகா், கணபதிபாளையம் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது திராவிடக் கட்சிகள் போன்று பெரிய அளவிலான தொண்டா்கள் இன்றி, மேளதாளங்கள் முழங்காமல், வெடி வெடிக்காமல் தன்னந்தனியாக, சீமானின் கொள்கைத் திட்டங்களை விளக்கி வாக்குச் சேகரித்தாா். மேலும் பொதுமக்களிடம் நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.