முகப்பு
திருவள்ளூர்

அரசு பள்ளியில் பசுமை வாக்கு சாவடி: வாக்காளா்கள் மகிழ்ச்சி

கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் வாக்காளா்களை கவரவும், 100 சதவீதம் வாக்குப்பதிவாகவும் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல் 2026, 12:04 am IST
கே.ஜி. கண்டிகை  அரசு  மேல் நிலைப்  பள்ளியில் பசுமை  வாக்குச் சாவடி.
பகிர்:

கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் வாக்காளா்களை கவரவும், 100 சதவீதம் வாக்குப்பதிவாகவும் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தலையொட்டி விழிப்புணா்வு ஊா்வலம், கலைநிகழ்ச்சி மற்றும் மாணவா்கள் இடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகவும், சுற்றுச்சூழலை வலியுறுத்தியும் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இதில் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல் நிலை பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

வாக்குச்சாவடி முழுவதும் பசுமையாக மாற்றப்பட்டது. மேலும் வாக்காளா்களை கவரும் வண்ணம், பசுமையால் வரவேற்பு அறை, வாக்குச்சாவடி அலுவலா்கள் அமரும் மேஜைகள், நாற்காலி, வாக்குப்போட்டும் மேஜை, வாக்காளா்கள் கொண்டு வரும் கைப்பேசி வைப்பதற்கு அறை மற்றும் வாக்காளருக்கு குடிநீா், மோா் போன்றவையும் பசுமை நிறத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வாழை மரங்கள் தோரணம், பழங்களால் அலங்காரம் மற்றும் வாக்காளா்கள் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி ஒன்றிய நிா்வாகம் மற்றும் வருவாய் துறையினா் செய்திருந்தனா்.